Thi.Su.Ba. - தி.சு.பா.

வணக்கம்!

என் எண்ண ஓட்டத்தினின்று பிறக்கும் இந்த எழுத்துக்களை வாழ்க்கை ஓட்டத்திற்கு ஈடு செய்து ஓட வைக்க ஒரு முயற்சி தான் இந்த இணையதளம். என் எண்ண ஓட்டத்தை சோதனை செய்ய ஓர் ஆடுகளம். என் மரணத்தோடு இந்த எண்ணமும், அதன் எழுத்துக்களும் நின்று போகின்றனவா? வாழ்க்கை வற்றாத ஜீவ நதியைப் போல், ஓடிக் கொண்டே இருக்கிறது. என் மரணத்திற்கு அப்பாலும் ஓடும். என் எண்ண ஓட்டத்தை அடுத்தத் தலைமுறயினருக்கு எடுத்துச் செல்லும் கடமை வாழ்க்கை ஓட்டத்திற்கு இருக்கிறது. வாழ்க்கை ஓட்டம், எண்ண ஓட்டத்தை தன் முதுகில் ஏற்றி செல்வதால் என் எழுத்துக்களுக்கு மரணம் என்ற ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என் எழுத்துக்களுக்கு மரணம் இல்லாத காரணத்தினால் எனக்கும் மரணம் இருப்பதற்கு வாய்ப்பில்லை!

இன்று ஆரம்பித்த இந்த முயற்சி, ஓட்டம் இறுதி வரை செல்லும். வாழ்வின் இறுதி வரை செல்லும்!!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

Welcome

Recent Blog Entries

by Bala | 0 comments

Recent Forum Posts

No recent posts